பேரறிஞர் அண்ணா அவர்களின் அரசு, உலகமெங்கும் தமிழ் முழக்கம் கேட்க இரண்டாம் உலகத் தமிழ்மாநாட்டை 1968ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 3ஆம் நாள் முதல் 10ஆம் நாள் வரை தமிழறிஞர்களும் தமிழாராய்ச்சி வல்லுநர்களும் தமிழ் ஆர்வலர்களும் பங்கேற்க, மிகச்சிறப்புடன் சென்னையில் நடத்தியது.
இம்மாநாட்டில் சென்னை தீவுத்திடலில் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய நிறைவு உரையின் சுருக்கமான ‘தயங்காதே தமிழா!’ என்ற கட்டுரையைக் ‘கட்டுரைகள்’ தலைப்பின் கீழ்க் காணலாம்.