ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு

1981ஆம் ஆண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவர் பாரதரத்னா எம்.ஜி.ஆர் அவர்களால் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு சனவரித் திங்கள் 4 ஆம் நாள் முதல் 10 ஆம் நாள் வரை மதுரை மாநகரில் நடத்தப்பெற்றது. அன்னைத் தமிழ்மொழி மேலும் பெருமை கொள்ளும் வகையில் மதுரையில் உலகத் தமிழ்ச்சங்கம் தொடங்கவும் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கவும் இம்மாநாடு வகை செய்தது.

இம்மாநாட்டில் இடம்பெற்ற மாண்புமிகு புரட்சித் தலைவர் பாரதரத்னா எம்.ஜி.ஆர் அவர்களின் ‘அமுதத்தமிழ் வளர்ப்போம்’ கட்டுரையைக் ‘கட்டுரைகள்’ தலைப்பின் கீழ்க் காணலாம்.

உலக தமிழ் மாநாடுகள்