செய்திகள்

4. பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு (18.5.2015 – 19.5.2015)

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை மற்றும் சென்னைப் பல்கலைக்கழகம் இணைந்து 18.05.2015 மற்றும் 19.05.2015 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை எழும்பூரில் பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டை நடத்தின. இதில் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.பி.பழனியப்பன் அவர்கள், மற்றும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.கே.சி.வீரமணி அவர்கள் தலைமையேற்று மாநாட்டைத் துவக்கி வைத்தனர். உடன் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இரா.தாண்டவன் அவர்கள், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் முனைவர் மூ.இராசாராம்,இ.ஆ.ப., மற்றும்; உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை தனி அலுவலர் முனைவர் க.பசும்பொன் ஆகியோர் உள்ளனர்.