செய்திகள்

சிறப்புச் சொற்பொழிவு – 7 (8.7.2015)

08.07.2015 அன்று சிறப்புச் சொற்பொழிவு-7 மதுரை அருள்மிகு மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ஆசுதிரேலிய தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழக நிருவாகக் குழு உறுப்பினரும் உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன் மற்றும் மலேசிய கோலாலம்பூர் இந்தியச் சங்கத்தின் தலைவர் திரு.பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.