செய்திகள்

சிறப்புச் சொற்பொழிவு – 8 (2.6.2016)

உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகத்தில் நடைபெறும் முதல் நிகழ்வாக மலேசியாவிலிருந்து தமிழகம் வந்திருந்த மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள், ஆசிரியர்களுக்கான ‘சிறப்புச் சொற்பொழிவு -8’ 02.06.2016 அன்று பிற்பகல் 5.00 மணியளவில் நடைபெற்றது.

இச்சிறப்புச் சொற்பொழிவில் உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் முனைவர் கா.மு.சேகர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். தமிழறிஞர் முதுமுனைவர் இரா.இளங்குமரன் அவர்களும் எழுத்தாளர் திரு.சு.வெங்கடேசன் அவர்களும் சொற்பொழிவாற்றினர்.