செய்திகள்

12. திருக்குறள் பணியில் தடம்பதித்த சான்றோர் கருத்தரங்கு மற்றும் திருக்குறள் நூல் கண்காட்சி (18.01.2017, 19.01.2017)

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையின் சார்பில் 18.01.2017, 19.01.2017 ஆகிய இரண்டு நாள்கள் ‘திருக்குறள் பணியில் தடம்பதித்த சான்றோர் கருத்தரங்கு மற்றும் திருக்குறள் நூல் கண்காட்சி’ நடைபெற்றது. இதன் தொடக்கவிழா 18.01.2017 அன்று பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.கொ.வீரராகவராவ், இ.ஆ.ப., அவர்கள் திருக்குறள் நூல் கண்காட்சியையும் கருத்தரங்கத்தையும் தொடங்கி வைத்தும் விழா மலரை வெளியிட்டும் விழாப் பேருரையாற்றினார்.