செய்திகள்

சிறப்புச் சொற்பொழிவு – 9 (27.1.2017)

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையின் சார்பில் சிறப்புச் சொற்பொழிவு – 9 ‘சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சி’ எனும் தலைப்பில் 27.01.2017 அன்று பிற்பகல் 4.30 மணிக்கு நடைபெற்றது.

இச்சொற்பொழிவில் உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் முனைவர் கா.மு.சேகர் அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார். மதுரை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் முனைவர் க.பசும்பொன் அவர்கள் முன்னிலை வகித்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னைத் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் இரா.மோகன் அவர்கள் சொற்பொழிவாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் தமிழ்த்திரு நா.ஆண்டியப்பன் அவர்கள் ‘சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சி’ எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.