செய்திகள்

13. கீழடி ஆய்வும் முன்னெடுப்புத் தேவைகளும் (27.03.2017)

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை மற்றும் மதுரை தியாகராசர் கல்லூரி தமிழ்த்துறை உயராய்வு மையமும் இணைந்து 27.03.2017 அன்று காலை 10.00மணிக்குத் தியாகராசர் கல்லூரியின் தொல்காப்பியர் அரங்கில் ‘கீழடி ஆய்வும் முன்னெடுப்புத் தேவைகளும்’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடத்தின. இக்கருத்தரங்கில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இ.பேச்சிமுத்து அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தியாகராசர் கல்லூரியின் செயலர் மதிப்புறு க.தியாகராசன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் மு.எயினி அவர்கள் முன்னிலையுரை ஆற்றினார். இவர்களைத் தொடர்ந்து உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநர் முனைவர் கா.மு.சேகர் அவர்கள் தொடக்கவுரை ஆற்றிச் சிறப்பித்தார்.