செய்திகள்

16. அற இலக்கியங்களுக்குத் திருக்குறளின் கொடை (16.05.2017)

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத் திருக்குறள் ஆய்வு மையமும் இணைந்து 16.05.2017 அன்று முற்பகல் 10.00 மணிக்கு அழகப்பா பல்கலைக்கழகக் கருத்தரங்க அரங்கில் ‘அற இலக்கியங்களுக்குத் திருக்குறளின் கொடை’ எனும் கருத்தரங்கை நடத்தின. அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சொ.சுப்பையா அவர்கள் தலைமையுரை ஆற்றினார். உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் முனைவர் கா.மு.சேகர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் ம.திருமலை அவர்களும் அழகப்பா பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.