செய்திகள்

நூல் அரங்கேற்றம் – 2 (30.01.2018)

30.01.2018 அன்று பிற்பகல் 4.30 மணிக்கு நடைபெற்ற நூல் அரங்கேற்ற நிகழ்வில், திரு.டி.கே.இரவீந்திரன் அவர்களின் ‘நந்திபுரத்து நாயகன்’ வரலாற்று நாவல், கவிஞர் கௌதமன் நீல்ராஜ் அவர்களின், ‘கருவாய் உருவான என் மழலையே’ கவிதை நூல், கவிஞர் இரா.இரவி அவர்களின் ‘ஹைக்கூ உலா’ ஹைக்கூ கவிதை நூல், திரு.துரை.தனபாலன் அவர்களின் ‘திருக்குறள் காமத்துப்பாலில் இலக்கிய நயம்’ ஆய்வு நூல், கவிஞர் மதுரா.வேள்பாரி அவர்களின் ‘அகம் மலர்ந்த ஆம்பல்கள்’ கவிதை நூல் ஆகியவை அரங்கேற்றம் செய்யப்பட்டன. இந்நிகழ்வின் ஒரு பகுதியாகக் கவிஞர் மதுரா.வேள்பாரி அவர்களின் ‘அகம் மலர்ந்த ஆம்பல்கள்’ கவிதை நூல் வெளியீடு செய்யப்பட்டது.