செய்திகள்

ஆய்வரங்கம் – 9 உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையின் சார்பில் 02.03.2018 அன்று ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவுக’ எனும் ஆய்வரங்கம் உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கில் நடைபெற்றது.

இவ் ஆய்வரங்க நிகழ்வில், உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் முனைவர் கா.மு.சேகர் அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார். மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னைத் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் இரா.மோகன் அவர்கள் அறிமுகவுரை ஆற்றினார். தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் மலேசியா ச.பாண்டியன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து அமெரிக்கா ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை நிறுவனர், தலைவர் மருத்துவர் விஜய் ஜானகிராமன் அவர்கள், ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவுக’ எனும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார். திரைப்பட இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.