செய்திகள்

ஆய்வரங்கம் – 10 உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையின் சார்பில் 11.04.2018 அன்று ‘இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் தேவைகளும்’ எனும் ஆய்வரங்கம் உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கில் நடைபெற்றது.

11.04.2018 அன்று முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற்ற இந்த ஆய்வரங்க நிகழ்வில், உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் முனைவர் கா.மு.சேகர் அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார். மதுரை மொழிபெயர்ப்பாளர் முனைவர் இராஜேஸ்வரி செல்லையா அவர்கள் ‘இணையத் தமிழ் - இனிய தமிழ்’ என்னும் தலைப்பில் கருத்துரை நிகழ்த்தினார். அவரைத் தொடர்ந்து ஆசுதிரேலியா வாழ் தமிழரும் வழக்குரைஞருமான முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் அவர்கள் ‘இணையத்தில் தமிழ் - வளர்ச்சியும் தேவைகளும்’ என்னும் தலைப்பில் எனும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார்.