செய்திகள்

ஆய்வரங்கம் – 11 உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையின் சார்பில் 06.06.2018 அன்று ‘சிங்கப்பூர்த் தமிழ்மொழி விழா – வரலாறும் பின்னணியும்’ எனும் ஆய்வரங்கம் உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கில் நடைபெற்றது.

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையின் சார்பில் 06.06.2018 அன்று நடைபெற்ற ‘சிங்கப்பூர்த் தமிழ்மொழி விழா - வரலாறும் பின்னணியும்’ எனும் ஆய்வரங்க நிகழ்வில், உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் முனைவர் கா.மு.சேகர் அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார். மதுரை பேராசிரியர் இ.கி.இராமசாமி அவர்கள் சிங்கப்பூர் திரு.நா.ஆண்டியப்பன் அவர்களின் ‘முள்ளும் மலரும்’ சிறுகதைத் தொகுப்பிற்கு நூல் அறிமுகவுரையாற்றினார். பேராசிரியர் இரா.மோகன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து, சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் தமிழ்த்திரு.நா.ஆண்டியப்பன் அவர்கள், ‘சிங்கப்பூர்த் தமிழ்மொழி விழா - வரலாறும் பின்னணியும்’ என்னும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார்.