செய்திகள்

7. பழந்தமிழரின் சுற்றுச்சுழல் சிந்தனை கருத்தரங்கம் (27.02.2015)

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் 27.02.2015 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கா.ராசு மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் “பழந்தமிழரின் சுற்றுச்சுழல் சிந்தனைகள்” என்னும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அரசு செயலாளர் முனைவர் மூ.இராசாராம், இ.ஆ.ப., மதுரை மாவட்ட ஆட்சியர் முனைவர் இல.சுப்பிரமணியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.