செய்திகள்

9. சங்கத் தமிழரின் கட்டடக்கலை (10.10.2015)

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் இணைந்து 10.10.2015 அன்று தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூரில் அரசு செயலாளர் முனைவர் மூ.இராசாராம் தலைமையில் “சங்கத் தமிழரின் கட்டடக்கலை” என்னும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை தனி அலுவலர் முனைவர் க.பசும்பொன், கட்டட வடிவமைப்பாளர் ப.ஜீ.கார்த்திக், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் திரு.கோ.தெய்வநாயகம்,உதவிப் பேராசிரியர் முனைவர் கி.கந்தன்,பேராசிரியர் சு.இராசவேலு, மற்றும் கட்டுரையாளர்கள், ஆய்வு மாணவர்கள் கலந்து கொண்டனர்.