செய்திகள்

தமிழ் நிலாக் கவியரங்கம் – 1 (12.01.2017) ‘அடிக்கரும்பாய் இனிக்கட்டும் வாழ்க்கை’

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையின் பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கில் ‘அடிக்கரும்பாய் இனிக்கட்டும் வாழ்க்கை ’ என்ற தலைப்பில் சுழலும் கவியரங்கம் சனவரித் திங்கள்12ஆம் நாள் பிற்பகல் 4.00 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநர் முனைவர் கா.மு.சேகர் அவர்கள் தலைமையுரையாற்றினார். தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர் முனைவர் க.பசும்பொன் அவர்கள் முன்னிலையுரை ஆற்றினார். தங்கம் மூர்த்தி அவர்கள் கவியரங்கத் தலைமை ஏற்றார். அவரின் கீழ் கவிஞர்கள் ரமா.ராமநாதன், சு.மதியழகன், ஸ்டாலின் சரவணன், காசாவயல் கண்ணன், புதுகைப் புதல்வன் முதலியோர் கவிதை படித்தனர். இது தன்னார்வ அடிப்படையில் நடத்தப்பட்ட நிகழ்வாகும்.