இலக்கண வகுப்பு – 1 (31.01.2017)

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையின் சார்பில் 31.01.2017 அன்று பிற்பகல் 3.30மணிக்கு இலக்கண வகுப்பு – 1 உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கில் நடைபெற்றது. இவ்வகுப்பில் மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னைத் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் தூ.சேதுபாண்டியன் அவர்கள் ‘நல்ல தமிழ்’ எனும் தலைப்பிலும் பேராசிரியரும் கவிஞருமான அபி அவர்கள் ‘படைப்புத் தமிழ்’ குறித்தும் வகுப்பு நடத்தினர்.