செய்திகள்

சிறப்புச் சொற்பொழிவு – 10 (15.3.2017)

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையின் சார்பில் ‘சிறப்புச் சொற்பொழிவு – 10’ 15.03.2017 அன்று பிற்பகல் 5.00 மணிக்கு உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கில் நடைபெற்றது.

இச்சொற்பொழிவில் உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் முனைவர் கா.மு.சேகர் அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார். மதுரை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் முனைவர் க.பசும்பொன் அவர்கள் முன்னிலை வகித்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னைத் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் இரா.மோகன் அவர்கள் சொற்பொழிவாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். பிரான்சு வாழ் தமிழறிஞர்கள் திரு.ஜெயராமன் ‘அயலகத் தமிழறிஞர்களின் தமிழ் வளர்ச்சிப் பணி’ எனும் தலைப்பிலும் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ ‘இக்காலத் தமிழில் இலக்கணப் பிழைகள்’ என்னும் தலைப்பிலும் சொற்பொழிவாற்றினர்.