செய்திகள்

தமிழ் நிலாக் கவியரங்கம் – 2‘தன்னிகரில்லாத் தமிழ்’15.03.2017

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையின் சார்பில் ‘தன்னிகரில்லாத் தமிழ்’ என்னும் தலைப்பில் தமிழ் நிலாக் கவியரங்கம்-2 15.03.2017 அன்று பிற்பகல் 5.00 மணிக்கு உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கத்தில் நடைபெற்றது.

‘தன்னிகரில்லாத் தமிழ்’ கவியரங்கத்திற்கு கவிஞர் மணிவண்ணன் அவர்கள் தலைமை வகித்தார். ‘உவமை’ என்னும் தலைப்பில் கவிஞர் பூர்ணா அவர்களும் ‘பழமை’ என்னும் தலைப்பில் கவிஞர் முத்துமாறன் அவர்களும் ‘புதுமை’ என்னும் தலைப்பில் கவிஞர் முத்து சந்தானம் அவர்களும் ‘இளமை’ என்னும் தலைப்பில் கவிஞர் சோலைராஜா அவர்களும் ‘இனிமை’ என்னும் தலைப்பில் கவிஞர் ரோசலின் அவர்களும் கவிதை வாசித்தளித்தனர்.