செய்திகள்

12. அயலகத் தமிழ்ப் பாடநூல்கள் – ஒரு மதிப்பீடு (31.03.2017)

மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும் மதுரை தியாகராசர் கலைக் கல்லூரியும் இணைந்து 31.03.2017 அன்று முற்பகல் 10.00 மணிக்கு ‘அயலகத் தமிழ்ப் பாடநூல்கள் – ஓர் மதிப்பீடு’ என்ற பன்னாட்டுக் கருத்தரங்கினை மதுரை தியாகராசர் கல்லூரித் தொல்காப்பியர் அரங்கில் நடத்தின. ஆசுதிரேலியத் தமிழறிஞர் தமிழ்த்திரு.ஜெயராம சர்மா அவர்கள், ‘ஆசுதிரேலியத் தமிழ்ப் பாடநூல்கள்’ குறித்தும் முனைவர் சௌ.வீரலட்சுமி அவர்கள் மலேசியப் பாடநூல்கள் குறித்தும் கட்டுரை வாசித்தளித்தனர்.