செய்திகள்

15. பன்முக நோக்கில் குறுந்தொகை (11.04.2017 – 12.04.2017)

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையின் சார்பில் 11.04.2017 – 12.04.2017 ஆகிய இரண்டு நாள்கள் ‘பன்முக நோக்கில் குறுந்தொகை’ எனும் கருத்தரங்கம் உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கில் நடைபெற்றது. 12.04.2017 அன்று பிற்பகல் 4.30 மணிக்கு நடைபெற்ற இக்கருத்தரங்கின் நிறைவு விழாவில் உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் முனைவர் கா.மு.சேகர் அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார். மதுரை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் முனைவர் க.பசும்பொன் அவர்கள் முன்னிலை வகித்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னைத் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் இரா.மோகன் அவர்கள் நிறைவுரையாற்றினார். உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ‘பன்முக நோக்கில் குறுந்தொகை’ எனும் நூல் வெளியிடப்பட்டது.