செய்திகள்

தமிழ் நிலாக் கவியரங்கம்-3‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’20.04.2017

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் 20.04.2017 அன்று தமிழ்நிலாக் கவியரங்கம்-3 நிகழ்வு ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்னும் தலைப்பில் உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கவியரங்கத்தில் கவிஞர் வீரபாண்டியத்தென்னவன் கவியரங்கத் தலைமை வகிக்க பேராசிரியர் சி.சக்திவேல், சங்கை வீ.ஜெயராமன், இரா.கல்யாணசுந்தரம், இரா.வரதராசன், மு.இதயத்துல்லா, கவிஞர் மகாமுருகுபாரதி, பாவலர் குறளடியான், பா.பொன்பாண்டி ஆகியோர் கவிதை படித்தனர்.