செய்திகள்

தமிழ் நிலாக் கவியரங்கம்-4‘தேமதுரத் தமிழோசை’ 18.05.2017

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் 18.05.2017 அன்று தமிழ்நிலாக் கவியரங்கம்-4 நிகழ்வு ‘தேமதுரத் தமிழோசை’ என்னும் தலைப்பில் முற்பகல் 10.00 மணிக்கு உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கவியரங்கத்தில் கவிஞர் வீரபாண்டியத்தென்னவன் கவியரங்கத் தலைமை வகிக்க சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா நிறுவனர் நிலாச்சந்தர் ந.பாண்டியராஜன் அவர்கள் முன்னிலை வகித்தார். கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன், கவிஞர் செந்தாமரைக்கொடி, ஆர்.இராஜகோபால், இரா.வரதராசன், மகாமுருகுபாரதி, பாவலர் குறளடியான் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட கவிஞர்கள் கவிதை படித்தனர்