செய்திகள்

நூல் அரங்கேற்றம் – 3 (28.02.2018)

மூன்றாவது ‘நூல் அரங்கேற்றம்’ 28.02.2018 அன்று முற்பகல் 10.45 மணிக்கு நடைபெற்றது. மதுரை நூல் விமர்சகர் முனைவர் ந.முருகேசபாண்டியன் அவர்கள், ‘கம்பராமாயணத்தில் கட்டமைப்பு’ என்னும் ஆய்வு நூலிற்கும் ‘அவசர உலகமா? அவரவர் உலகமா?’ என்னும் கட்டுரை நூலிற்கும் நூல் மதிப்புரை வழங்கினார். பேராசிரியை உ. அனார்கலி அவர்கள் ‘சங்கப் பெண்பாற் புலவர்களின் உளவியல்’ என்னும் ஆய்வு நூலிற்கும் ‘மகளதிகாரம்’ என்னும் கவிதை நூலிற்கும் நூல் மதிப்புரை வழங்கினார். பேராசிரியை வாசுகி ஜெயரத்னம் அவர்கள் ‘மெய்ப்பொருள் கண்டேன்’ என்னும் கட்டுரை நூலிற்கும் ‘இந்திய – தமிழ் சித்தர் மருத்துவத்தில் சர்க்கரை, டெங்கு நுண்கிருமி தீர்வுக்கான களம்’ என்னும் தமிழ் மருத்துவ நூலிற்கும் நூல் மதிப்புரை வழங்கினார். படைப்புகளை அளித்த முனைவர் ஸ்ரீலதா, முனைவர் சி.முத்துமாலை, திரு.ஆண்டன் பெனி, திரு.எஸ்.ஆர்.சுப்பிரமணியம், கவிஞர் க.கலையரசன், திருமதி விஜயராணி செல்லப்பா ஆகியோர் ஏற்புரையாற்றினர்.