செய்திகள்

நூல் அரங்கேற்றம் – 5 (24.04.2018) அன்று முற்பகல் 11.30 மணிக்கு நடைபெற்றது.

ஐந்தாவது ‘நூல் அரங்கேற்றம்’ 24.04.2018 அன்று முற்பகல் 11.30 மணிக்கு நடைபெற்றது. முனைவர் யாழ் சு.சந்திரா அவர்கள், ‘திருமூலர் திருமந்திரத்தில் மனம்’ என்னும் ஆய்வு நூலிற்கும் ‘திருவள்ளுவமாலை மூலமும் எளிய உரை விளக்கமும்’ என்னும் ஆய்வு நூலிற்கும் நூல் மதிப்புரை வழங்கினார். முனைவர் சு.திருவரசன் அவர்கள் ‘நாட்டியக் குதிரை’ என்னும் சிறுகதை நூலிற்கும் ‘சிறப்புக் கல்வி’ என்னும் கல்வியியல் நூலிற்கும் நூல் மதிப்புரை வழங்கினார். திரு.வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் ‘பெருங்காட்டுச் சுனை’ என்னும் கவிதை நூலிற்கும் ‘இரட்டுற மொழிதழ் நூறு’ என்னும் கவிதை நூலிற்கும் ‘உதிரும் மௌனம்’ என்னும் கவிதை நூலிற்கும் மதிப்புரை வழங்கினார். படைப்புகளை அளித்த முனைவர் சு.சாந்தி, முனைவர் செ.வில்சன், திரு.ச.இரத்தினசாமி, முனைவர் கூடல் தாரிக், திரு.பே.வள்ளிமுத்து ஆகியோர் ஏற்புரையாற்றினர்.