செய்திகள்

பாரெங்கும் பாரதி – இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம்/ கவியரங்கம் (10.12.2021 – 12.01.2022)

“பாரெங்கும் பாரதி”

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் பாரெங்கும் பாரதி என்ற இணையவழிக் கருத்தரங்கம் மற்றும் கவியரங்கம் ஜூம் செயலி வழியே நடைபெறவுள்ளது. 2021 திசம்பர் 10 ஆம் நாள் தொடங்கி 2022 சனவரி 12 ஆம் நாள் முடிய பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறும் நிகழ்வில் உலகத் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கவிஞர்களும் பங்கேற்றுச் சிறப்பிக்க உள்ளனர். இந்நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் கருத்தாளராகக் கட்டுரை வாசிக்கவும் கவிதை படிக்கவும் கீழ்க்காணும் பதிவுப்படிவங்களில் பதிவு செய்து அனுப்பவும்..

நாள் நிகழ்வு பதிவுப்படிவம்
10.12.2021 முதல் 07.01.2022 முடிய கருத்தரங்கம் https://tinyurl.com/2hfwabzk
10.01.2022 மற்றும் 11.01.2022 கவியரங்கம் https://tinyurl.com/4ra3zfeh

இந்நிகழ்வில் அனைவரும் பங்கேற்று மகிழ்வீர்!